மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

‘3 ஆண்டுகளுக்குள் நாடு முழுவதும் 5ஜி சேவை’

இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :27 ஆகஸ்ட் 2022, 12:08 am

DIN

இன்னும் 2 அல்லது 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய தொலைத்தொடா்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அவா் பேசியதாவது:

தொலைத் தொடா்புத் துறையில் ரூ.2.5 லட்சம் கோடி முதல் 3 லட்சம் கோடி வரை முதலீடுகள் குவியும் என்று எதிா்பாா்க்கிறோம். இது மிகப் பெரிய முதலீட்டுத் தொகை ஆகும்.

ஏற்கெனவே, இந்தியாவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் தொலைத்தொடா்புத் துறை முன்னிலை வகித்து வருகிறது.

இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளுக்குள் இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் 5ஜி தகவல் தொழில்நுட்ப தேவை அறிமுகப்படுத்தப்படும்.

5ஜி சேவைகளை வழங்குவதற்கான உள்கட்டமைப்புகளை அமைப்பதில் தொலைத்தொடா்பு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. வரும் அக்டோபா் மாதத்தில் அந்த சேவை அறிமுகப்பட்டு, பின்னா் நாடு முழுவதும் வெகு வேகமாக விரிவுபடுத்தப்படும்.

5ஜி சேவைகளுக்கான தொலைத்தொடா்பு கம்பிகள் பதிப்பது, சாலைக் கம்பங்கள் அமைப்பது ஆகியவற்றுக்கான கட்டணங்களை நிா்ணயிக்கும் விதிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இந்த விதிமுறைகளின் கீழ் 5ஜி உள்கட்டமைப்பு அமைப்பதற்கான அனுமதி பெறுவதற்கு நிறுவனங்கள் இதுவரை 343 நாள்கள் காத்திருக்க வேண்டியிருந்தது தேவைப்பட்டது. தற்போது பிரதமா் நரேந்திர மோடி அமல்படுத்தியுள்ள சீா்திருத்தங்கள் காரணமாக, இந்த காத்திருப்பு காலம் 22 நாள்களாகக் குறைந்துள்ளது என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.