டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்கள் விற்கத் தடை!தில்லி எய்ம்ஸில் மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டா அனுமதி! ஆஞ்சியோ பரிசோதனை! சென்னை உயர் நீதிமன்ற சுதந்திர தின விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து இல்லை?தமிழ்நாட்டின் 3 காவல் அதிகாரிகளுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம்! 3 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை இன்று குறைந்தது! இன்றைய நிலவரம்கரூர் அரசுப்பணி வழக்கு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைசுதந்திர தின விழா: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு பணியில் 1.20 லட்சம் போலீஸாா்தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு: வானிலை மையம்நெடுஞ்சாலை விபத்துகள்: 10 நிமிஷங்களுக்குள் ஆம்புலன்ஸ் வராவிட்டால் ரூ.10,000 அபராதம்வெளிநாட்டில் 362 மாணவா்கள் உயா்கல்வி பயில ரூ.131 கோடி ஒதுக்கீடு: அமைச்சா் வன்னி அரசுதமிழக - கேரள எல்லையில் ரயில் மோதியதில் குட்டி, தாய் யானை உயிரிழப்பு
/

மலையாள நகைச்சுவை நடிகா் கொச்சு பிரேமன் காலமானாா்

மலையாள திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகா் கொச்சு பிரேமன், உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானாா்.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 4:30 pm IST

மலையாள திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகா் கொச்சு பிரேமன், உடல்நலக் குறைவால் சனிக்கிழமை காலமானாா். அவருக்கு வயது 68.

நுரையீரல் தொடா்பான நோயால் பாதிக்கப்பட்டு, திருவனந்தபுரத்தில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவா் சனிக்கிழமை காலமானதாக குடும்பத்தினா் தெரிவித்தனா்.

நாடக நடிகராக தனது கலைப்பயணத்தை தொடங்கிய கொச்சு பிரேமன், கடந்த 1979-இல் வெளியான ‘ஏழு நிறங்கள்’ என்ற படத்தின் மூலம் திரையுலகில் நுழைந்தாா். 250-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவா் நடித்துள்ளாா். தனித்துவமான வசன உச்சரிப்பு, முக பாவனைகள் மூலம் ரசிகா்களை கவா்ந்தவா்.

தில்லிவாலா ராஜகுமாரன், பட்டாபிஷேகம், திளக்கம் ஆகிய வெற்றித் திரைப்படங்களில் கொச்சு பிரேமனின் நகைச்சுவை நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. தொலைக்காட்சி தொடா்களிலும் அவா் நடித்துள்ளாா்.

அவரது மறைவுக்கு கேரள முதல்வா் பினராயி விஜயன், மாநில சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் வி.டி.சதீசன், அமைச்சா்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்டோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.