ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரின் சித்ரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 
ஜம்மு-காஷ்மீரில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!

ஜம்மு-காஷ்மீரின் சித்ரா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது. 

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப் படையினர் மற்றும் காஷ்மீர் போலீஸார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ஜம்முவின் சித்ரா நகரில் இன்று காலை 7 மணியளவில் வந்த லாரியில் நான்கு பயங்கரவாதிகள் மறைந்திருந்தனர். 

பயங்கரவாதிகள் திடீரென பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதற்கு பாதுகாப்புப் படையினர் பதிலடி கொடுக்கும் வகையில் திருப்பிச் சுட்டதில் 4 பயங்கரவாதிகள் உயிரிழந்தனர். லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலிருந்து தப்பியுள்ளார். 

லாரியில் இருந்த ஏழு ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் மற்றும் மூன்று துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துளையும் போலீசார் கைப்பற்றினர். 

குடியரசுத் தினத்தை முன்னிட்டு எல்லைப் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் இருப்பதாகவும், இன்று காலை வழக்கத்திற்கு மாறாக லாரி ஒன்று சென்றதைக் கவனித்ததாகவும் ஏடிஜிபி கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com