இந்தியாவில் புதிதாக 1.59 லட்சம் பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டோர், நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தோர், நோய்த் தொற்றுக்கு உயிரிழந்தவர்கள் தரவுகளை மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. புதிதாக 1,59,632 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று இருப்பது உறுதி செய்யப்படும் தினசரி விகிதம் 10.21% ஆக உள்ளது.
இதையும் படிக்க | மூன்றாவது தவணைக்கு கோவேக்ஸின் பாதுகாப்பானது:பாரத் பயோடெக்
மேலும் 40,863 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 327 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,44,53,603 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,83,790 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 5,90,611 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
தடுப்பூசி: நாட்டில் இதுவரை மொத்தம் 151.58 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.