நீட் மறுதேர்வு முடிவுகள் வெளியானது! 11.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி!வா்த்தக ஒப்பந்தம்! பிரிட்டனுக்கு ஏற்றுமதியான தங்கம், வெள்ளி, வைர நகைகள்!பழனி கோயில் நில மோசடி வழக்கு! முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது சிபி-சிஐடிபயன்பாட்டுக்கு வந்தது ஐஆர்சிடிசி பீட்டா பதிப்பு! எப்படி அணுகுவது?வினாத்தாள் கசிவு முதல் ராமர் கோயில் வரை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்! கார்கே முறைகேடு புகார்! திருவான்மியூர் - உத்தண்டி உயர்நிலை சாலை திட்டம் ரத்து! ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு ஹோர்முஸ் வழித்தடக் கப்பல்களில் இந்திய மாலுமிகளை பணியமர்த்த கூடாது! மத்திய அரசு மத்திய அரசு நிகழ்ச்சியில் மேயர் பிரியா! கொளத்தூரில் பாஸ்போர்ட் சேவை மையம் திறப்பு!
/

என் தந்தை எந்தக் கட்சியிலும் இணையவில்லை: சுவாமி பிரசாத் மௌர்யா மகள்

உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த சுவாமி பிரசாத் மௌர்யா, இதுவரை எந்தக் கட்சியிலும் இணையவில்லை என அவரது மகள் சங்கமித்ரா மௌர்யா தெரிவித்துள்ளார்.

News image

சுவாமி பிரசாத் மௌர்யா (கோப்புப்படம்)

Updated On :11 ஜனவரி 2022, 7:32 pm IST


உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த சுவாமி பிரசாத் மௌர்யா, இதுவரை எந்தக் கட்சியிலும் இணையவில்லை என அவரது மகள் சங்கமித்ரா மௌர்யா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சங்கமித்ரா கூறியது:

"எனது தந்தை உறுதியாக ராஜிநாமா செய்துவிட்டார். ஆனால், சமாஜவாதி கட்சியிலோ அல்லது வேறு எந்தக் கட்சியிலோ இன்னும் இணையவில்லை.

2016-இல் எனது தந்தை பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து வெளியேறியபோதும், எனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சிவபால் யாதவ் வெளியிட்டார். அதுவும் சமூக ஊடகங்களில் வைரலானது. அடுத்த இரண்டு நாள்களில் வியூகம் குறித்து முடிவெடுப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்."

சுவாமி பிரசாத் மௌர்யா அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தவுடன், அவரை வரவேற்பதாக சமாஜவாதி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. சமூக நீதிப் புரட்சி நடைபெறும் என்றும் 2022-இல் மாற்றம் நிகழும் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.