உத்தரப் பிரதேசத்தில் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்த சுவாமி பிரசாத் மௌர்யா, இதுவரை எந்தக் கட்சியிலும் இணையவில்லை என அவரது மகள் சங்கமித்ரா மௌர்யா தெரிவித்துள்ளார்.
இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் சங்கமித்ரா கூறியது:
"எனது தந்தை உறுதியாக ராஜிநாமா செய்துவிட்டார். ஆனால், சமாஜவாதி கட்சியிலோ அல்லது வேறு எந்தக் கட்சியிலோ இன்னும் இணையவில்லை.
2016-இல் எனது தந்தை பகுஜன் சமாஜ் கட்சியிலிருந்து வெளியேறியபோதும், எனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை சிவபால் யாதவ் வெளியிட்டார். அதுவும் சமூக ஊடகங்களில் வைரலானது. அடுத்த இரண்டு நாள்களில் வியூகம் குறித்து முடிவெடுப்பதாக ஊடகங்களிடம் தெரிவித்தார்."
சுவாமி பிரசாத் மௌர்யா அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தவுடன், அவரை வரவேற்பதாக சமாஜவாதி ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தது. சமூக நீதிப் புரட்சி நடைபெறும் என்றும் 2022-இல் மாற்றம் நிகழும் என்றும் அந்தப் பதிவில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
களியக்காவிளை அருகே வீட்டில் வெடிபொருள்கள் பதுக்கல்: பேரூராட்சி உறுப்பினா் கைது

களியக்காவிளை அருகே புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

பளுகல் அருகே தொழிலாளி மா்ம மரணம்

குமரி மாவட்டத்தை வளா்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல ஒத்துழைக்க வேண்டும்: அமைச்சா் ராஜேஷ்குமாா்
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



