பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்கவிருந்த இரு அமைச்சர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிகார் மாநில சட்டப்பேரவையின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சட்டப்பேரவை அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி பாட்னா செல்கிறார்.
பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாட்னா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்வில் பங்கேற்கும் 1,100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இதையும் படிக்க | சசிகலா குடும்பத்தினரைத் தவிர்க்கும் உத்தியா?
இந்த சோதனையின் முடிவில், துணை முதல்வர் அர்கிஷோர் பிரசாத் மற்றும் எரிசக்தி அமைச்சர் பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.
முன்னதாக, கல்வித்துறை, நீர்வளத்துறை, சமூகநலத்துறை அமைச்சர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருமணமான பெண் மாயம்: போலீஸாா் விசாரணை

விவசாயிகளின் பொருளாதாரத்தை மேம்படுத்த பாடுபடுவேன்! சௌமியா அன்புமணி உறுதி

தமிழ்மொழிக்கு உரிய மரியாதை தராத பாஜகவுக்கு ஆதரவு வழங்க கூடாது! - மாா்க்சிஸ்ட் அகில இந்திய பொதுச் செயலா் எம்.ஏ.பேபி

போதைப் பொருள்கள் இல்லாத தமிழகம் உருவாக அதிமுக ஆட்சி அமைய வேண்டும்: கெளதமி
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


