எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

மோடி நிகழ்வில் பங்கேற்கவிருந்த இரு அமைச்சர்களுக்கு கரோனா

பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்கவிருந்த இரு அமைச்சர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image

நரேந்திர மோடி

Updated On :12 ஜூலை 2022, 3:24 pm IST

பிகாரில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொள்ளும் நிகழ்வில் பங்கேற்கவிருந்த இரு அமைச்சர்களுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிகார் மாநில சட்டப்பேரவையின் நூற்றாண்டு கொண்டாட்டங்களின் நிறைவு விழா மற்றும் சட்டப்பேரவை அருங்காட்சியகத்துக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்பதற்காக இன்று மாலை 6 மணியளவில் பிரதமர் மோடி பாட்னா செல்கிறார்.

பிரதமர் மோடியின் வருகையையொட்டி பாட்னா முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிகழ்வில் பங்கேற்கும் 1,100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்கள் மற்றும் அரசு பணியாளர்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சோதனையின் முடிவில், துணை முதல்வர் அர்கிஷோர் பிரசாத் மற்றும் எரிசக்தி அமைச்சர் பிஜேந்திர பிரசாத் யாதவ் ஆகியோருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவரும் தனிமைப்படுத்திக் கொண்டனர்.

முன்னதாக, கல்வித்துறை, நீர்வளத்துறை, சமூகநலத்துறை அமைச்சர்களுக்கு கரோனா கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.