நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை முன்னிட்டு ஜூலை 17ஆம் தேதி அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 18-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. பழைய நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெறும் கடைசிக் கூட்டம் இதுவாகும்.
இதையும் படிக்க | சசிகலா குடும்பத்தினரைத் தவிர்க்கும் உத்தியா?
இந்நிலையில், மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக ஜூலை 17ஆம் தேதி காலை 11 மணிக்கு அனைத்துக் கட்சிகள் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
கூட்டத் தொடரின் முதல் நாளில் குடியரசுத் தலைவா் தோ்தலும், ஆகஸ்ட் 6-ஆம் தேதி குடியரசு துணைத் தலைவா் தேர்தலும் நடைபெறவுள்ளது. புதிதாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மழைக்காலக் கூட்டத்தொடரிலேயே பதவி ஏற்பார்கள்.