‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு மிரட்டல்: விமானம் பாட்னாவில் தரையிறக்கம்

வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, தில்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் பாட்னா விமான நிலையத்தில் பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது,

News image
Updated On :31 அக்டோபர் 2022, 8:40 am

DIN


புதுதில்லி: வெடிகுண்டு மிரட்டல் காரணமாக, தில்லி புறப்பட்ட இண்டிகோ விமானம் பாட்னா விமான நிலையத்தில் பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது, வெடிகுண்டு மிரட்டல் விடுத்த பயணி கைது செய்யப்பட்டுள்ளார். 

வியாழக்கிழமை தில்லி செல்லும் இண்டிகோ விமானத்தில் பயணி ஒருவர் தனது பையில் வெடிகுண்டு இருப்பதாக கூறியதை அடுத்து, பதற்றம் ஏற்பட்டதை அடுத்து பாட்னா விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஆனால், சம்பவ இடத்திற்கு வந்த வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் அவரது பையை சோதனை செய்ததில் வெடிகுண்டு எதுவும் இல்லை. பயணி கைது செய்யப்பட்டு வெடிகுண்டு நிபுணர்கள் விமானத்தை முழுமையாக சோதனையிட்டு வருகின்றனர்.

விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் விடுத்த பயணியிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறன்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.