மகாராஷ்டிர மாநிலம் புணேவில் மகளுக்கு பலமுறை பாலியல் வன்கொடுமை அளித்ததாக மனைவி அளித்த புகாரின் பேரில் கணவனை காவல் துறையினர் கைது செய்தனர்.
புணேவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள பிம்ரி சிஞ்சிவாத் பகுதியிலுள்ள 39 வயதுடைய நபர் தனது மகளிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் தெரிவித்துள்ளார். அதன் பிறகு மனைவி அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கணவரை கைது செய்தனர்.
இது குறித்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்ததாவது, 7 வயது மகளை தந்தையே பலமுறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கடந்த மார்ச் மாதம் முதல் இந்த சம்பவம் அடிக்கடி நடந்துள்ளதாக புகார் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இதனைத் தொடர்ந்து உரிய விசாரணைக்குப் பிறகு கணவரை கைது செய்து காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சங்கவியுடன் நடிக்க வேண்டாம்..! ரசிகையின் கடிதத்திற்குச் சுவாரஸ்யமாக பதிலளித்த விஜய்!
அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி

வாக்களிக்கும் உரிமையையும் ஒரு அடிப்படை உரிமையாக அறிவித்தால் என்ன? - ஜெய்ராம் ரமேஷ் கேள்வி







