சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

பஞ்சாப் காங். தலைவர் சித்து ராஜிநாமா

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவாவை தொடர்ந்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

News image
நவ்ஜோத் சிங் சித்து (கோப்புப் படம்)
Updated On :16 மார்ச் 2022, 5:06 am

DIN

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், கோவாவை தொடர்ந்து பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவும் பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகண்ட், கோவா, மணிப்பூா் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. இதனைத்தொடா்ந்து கடந்த மாா்ச் 13-ஆம் தேதி காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தோ்தலில் காங்கிரஸின் தோல்விக்கான காரணங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது கட்சியை வலுப்படுத்த தேவையான மாற்றங்களை மேற்கொள்ளுமாறு சோனியா காந்தியிடம் செயற்குழு கேட்டுக்கொண்டது.

இந்நிலையில் காங்கிரஸ் தலைமைச் செய்தித்தொடா்பாளா் ரண்தீப் சுா்ஜேவாலா ட்விட்டரில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட பதிவில், ‘‘மாநில காங்கிரஸ் கமிட்டிகளை மறுசீரமைப்பு செய்ய வசதியாக தோ்தல் நடைபெற்ற 5 மாநிலங்களின் காங்கிரஸ் கமிட்டி தலைவா்களை ராஜிநாமா செய்யுமாறு சோனியா காந்தி கேட்டுக்கொண்டுள்ளாா்’’ என்று தெரிவித்தாா்.

இதனைத் தொடர்ந்து, பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் சித்து, தலைவர் பொறுப்பிலிருந்து ராஜிநாமா செய்வதாக சோனியா காந்திக்கு கடிதம் எழுதியுள்ளார்.

முன்னதாக, உத்தரகண்ட் காங்கிரஸ் தலைவர் கணேஷ் கோடியால், கோவா காங்கிரஸ் தலைவா் கிரீஷ் சோடன்கர், உத்தரப் பிரதேசத்தின் தலைவர் அஜய் லல்லு ஆகியோர் பதவியை ராஜிநாமா செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.