மாசுபாடு காரணமாக கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், தொழிலாளர்களுக்கு ரூ.5,000 நிதியுதவி வழங்குமாறு தில்லி முதல்வர் கேஜரிவால், தொழிலாளர் அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மாசு அளவு மிகவும் மோசமடைந்து வருவதால், தில்லி என்.சி.ஆரில் கட்டுமானம் மற்றும் இடிப்பு நடவடிக்கைகளுக்குத் தடை விதிக்குமாறு மத்திய அரசின் காற்றின் தரக்குழு சனிக்கிழமையன்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது.
தில்லி முழுவதும் மாசுபாடு காரணமாக கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படாத இந்தக் காலகட்டத்தில் ஒவ்வொரு கட்டுமானத் தொழிலாளிக்கும் ரூ.5000 நிதியுதவி அளிக்குமாறு தொழிலாளர் அமைச்சர் மணீஷ் சிசோடியாவுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன் என்று கேஜரிவால் ட்வீட் செய்துள்ளார்.
கரோனா தொற்று நோய்களின் போது தில்லியில் பதிவு செய்யப்பட்ட கட்டுமானத் தொழிலாளர்களுக்கு ஆம் ஆத்மி அரசு நிதி உதவி வழங்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லியில் மழையுடன் கூடிய கடும் வெப்பம்: வழக்கத்திற்கு மாறான ஏப்ரல் வானிலை

போதைப் பொருள் விற்ற வழக்கில் இருவருக்கு கடுங்காவல் சிறை தண்டனை
பூட்டிய வீட்டை திறந்து நகை திருட்டு: இளைஞா் கைது

அடுத்த 20 ஆண்டுகளில் வெப்பமான நாள்கள் 15 முதல் 40 வரை அதிகரிக்கும்: ஏஐ தொழில்நுட்பம் மூலம் கணிப்பு
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


