தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது ஏர் இந்தியா

சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்தும் வகையில், ஏர் இந்தியா இன்று மிக முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :23 நவம்பர் 2022, 5:57 pm IST


புது தில்லி: சர்வதேச விமான சேவையை விரிவுபடுத்தும் வகையில், ஏர் இந்தியா இன்று மிக முக்கிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கண்டங்களுக்கு புதிதாக 6 விமானச் சேவையை ஏர் இந்தியா அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இதையும் படிக்க.. மங்களூரு குண்டு வெடிப்பு: குற்றவாளி வாட்ஸ்ஆப்பில் ஆதியோகி சிவன் படம் வைத்தது ஏன்?

மும்பை நகருடன் நியூ யார்க், பாரீஸ், ஃபிராங்க்பர்ட் நகரங்களை இணைக்கும் விமான சேவையையும், இடைநில்லா விமானச் சேவையை மீண்டும் தொடங்கும் வகையில், தில்லி நகரை கோப்பன்ஹேகன், மிலன், வியன்னா ஆகிய நகரங்களை இணைக்கும் விமான சேவையையும் அறிமுகப்படுத்துகிறது.

புதிய விமானங்களை செயல்பாட்டுக்குக் கொண்டுவந்து, தனது விமானச் சேவையை அதிரடியாக தீவிரப்படுத்திவரும் ஏர் இந்தியாவின் இந்த அறிவிப்பு பல விமானப் பயனிகளுக்கு மகிழ்ச்சியான செய்தியாக மாறியிருக்கிறது.

மும்பை - நியூயார்க் விமான சேவை 2023, பிப். 14 முதல் தினந்தோறும் இயக்கப்படவிருக்கிறது. பிப்ரவரி 1 முதல் தில்லி - மிலன் வாரந்தோறும் 4 விமான சேவையும், மார்ச் 1 முதல் தில்லி - வியன்னா, தில்லி - கோப்பன்ஹேகன் விமான சேவை வாரத்தில் 3 நாள்களும் இயக்கப்படவிருக்கிறது.

புதிய அறிவிப்பின் மூலம் ஐரோப்பிய நாடுகளுக்கு ஏர் இந்தியாவின் இடை நிறுத்தமில்லா விமான சேவையின் எண்ணிக்கை 79 ஆகவும், பிரிட்டனுக்கு 48 ஆகவும் அமெரிக்காவுக்கு 47 ஆகவும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.