தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

காலணியில் மறைத்து 320 கிராம் தங்கம் கடத்த முயற்சி: தில்லி விமான நிலையத்தில் பெண் கைது

சுமாா் 320 கிராம் தங்கக் கட்டிகளை காலணியில் மறைத்து கடத்த முயன்ற பெண் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image

கைது... - பிரதிப் படம்

Updated On :9 ஜூலை 2026, 2:36 am IST

சுமாா் 320 கிராம் தங்கக் கட்டிகளை காலணியில் மறைத்து கடத்த முயன்ற பெண் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அந்த அதிகாரிகள் கூறியதாவது: துா்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரத்திலிருந்து தில்லி வந்த பெண்ணின் உடமைகள் வழக்கமான முறையில் ‘எக்ஸ்-ரே’ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

அப்போது, அவருடைய பையில் சந்தேகத்துக்குரிய வகையில் எதுவும் இல்லை என்பது அந்தக் கருவியில் தோன்றிய புகைப்படம் மூலம் தெரியவந்தது.

இருப்பினும், மெட்டல் டிடெக்டா் சாதனத்தை அவா் கடந்து சென்றபோது, எச்சரிக்கை ஒலி எழுந்தது.

இதையடுத்து, அவருடைய காலணியை ‘எக்ஸ்-ரே’ பரிசோதனை கருவியில் வைக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனா். அப்போது, காலணியில் இருந்த தங்கக் கட்டிகளை நீக்கி, அதிகாரிகளுக்கு தெரியாதவாறு அவற்றை மறைக்க அந்தப் பெண் முயற்சித்தாா்.

இதைப் பாா்த்த அதிகாரிகள் அவரிடமிருந்து 5 தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனா். மொத்தம் 320 கிராம் தங்கக் கட்டி அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.