மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சோனியா காந்தி, ராகுல் வாழ்த்து

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
சோனியா காந்தி - மல்லிகார்ஜுன கார்கே
சோனியா காந்தி - மல்லிகார்ஜுன கார்கே

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற மல்லிகார்ஜுன கார்கேவுக்கு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

காங்கிரஸ் தலைவா் பதவிக்கு கடந்த திங்கள்கிழமை தோ்தல் நடைபெற்றது. இதில் மூத்த தலைவா்கள் மல்லிகாா்ஜுன காா்கே, சசி தரூா் ஆகிய இருவரும் களம் கண்டனா். மாநில காங்கிரஸ் கமிட்டி பிரதிநிதிகள் 9,915 போ் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,500-க்கும் மேற்பட்ட வாக்குகள் பதிவாகின. நாடு முழுவதும் 68 இடங்களில், ரகசிய வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 96% வாக்குகள் பதிவாகியுள்ளன.

இதையடுத்து, வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகள் சீலிடப்பட்டு, தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்துக்கு கொண்டுவரப்பட்டன.

தொடர்ந்து தில்லியில் உள்ள கட்சி தலைமையகத்தில் இன்று(புதன்கிழமை) காலை 11 மணியளவில் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்றது. 

இதில், மல்லிகாா்ஜுன காா்கே 7,897 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். மற்றொரு வேட்பாளரான சசி தரூர் 1,072 வாக்குகள் பெற்றிருப்பதாகவும் 416 வாக்குகள் செல்லாதது என்றும் அறிவிக்கப்பட்டது.

பிரியங்கா காந்தியுடன் மல்லிகாா்ஜுன காா்கே
பிரியங்கா காந்தியுடன் மல்லிகாா்ஜுன காா்கே

இதன் மூலமாக, 22 ஆண்டுகளுக்குப் பிறகு நேரு குடும்பத்தைச் சாராத ஒருவர் கட்சித் தலைவராகவுள்ளார். 

இந்நிலையில், புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர்  வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com