தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர் ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் மும்மொழிக் கொள்கைக்கு எதிரான மனுக்கள்: மத்திய அரசு, சிபிஎஸ்இ பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம் இன்றுமுதல் அமல்! யாருக்கு என்ன பலன்? தென் சீனக் கடலை சீனா உரிமை கோர முடியாது: தீா்ப்பாயத்தின் முடிவுக்கு இந்தியா வரவேற்புபாபநாசம் அருகே கோயிலில் எரிந்த விளக்கை அணைத்து எண்ணெய் குடித்த கரடி 2031-க்குள் 20,000 பொது மின்வாகன சாா்ஜிங் நிலையங்கள்: தமிழ்நாடு மின்வாரியம் 16 ஆண்டுகளாகப் பரிதவிக்கும் 11,773 பகுதிநேர ஆசிரியர்கள்!
/

நான்காவது தொழில் புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறுகிறது: பிரதமர் மோடி

நான்காவது தொழில் புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :10 செப்டம்பர் 2022, 2:38 pm IST

புது தில்லி: நான்காவது தொழில் புரட்சியை நோக்கி இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இன்று மத்திய-மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் விடியோ கணொலி வாயிலாக தொடக்கி வைத்தார்.

விடியோ கணொலி மூலம் நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மோடி, "மத்திய-மாநில அறிவியல் மாநாடு சப்கா பிரயாஸ் என்ற நமது மந்திரத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்று, நான்காவது தொழில்துறை புரட்சியை இந்தியா வழிநடத்தும் நிலையில், இந்தியாவின் அறிவியல் மற்றும் இந்தத் துறையுடன் தொடர்புடையவர்களின் பங்கு மிகவும் முக்கியமானது".

21ஆம் நூற்றாண்டின் புதிய இந்தியாவின் வளர்ச்சிக்கு, அனைத்துப் பகுதிகள் மற்றும் துறைகளின் வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் அறிவியல் முக்கியப் பங்கு வகிக்கும் என்றார்.

நாட்டின் விஞ்ஞானிகளின் சாதனைகளை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுமாறு மக்களை பிரதமர் கேட்டுக்கொண்டார்.

"நமது விஞ்ஞானிகளின் சாதனைகளை நாம் கொண்டாட வேண்டும். விஞ்ஞானிகளையும் அவர்களின் கண்டுபிடிப்புகளையும் கொண்டாடும் போது, ​​அறிவியல் நமது கலாசாரத்தின் ஒரு பகுதியாக மாறும். நமது அரசாங்கம் அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது" என்று பிரதமர் கூறினார்.

அறிவியல் அடிப்படையிலான வளர்ச்சி என்ற கருத்தோடு மத்திய அரசு செயல்பட்டு வருகிறது என்று அவர் வலியுறுத்தினார். 2014 முதல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையில் முதலீடு கணிசமான அளவு அதிகரித்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார்.

"2014ல் இருந்து அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலீடு அதிகரித்துள்ளது. அரசின் முயற்சியால், 2015ல், 81வது இடத்தில் இருந்த, உலக கண்டுபிடிப்பு குறியீடு, தற்போது 46-வது இடத்திற்கு இந்தியா முன்னேறி உள்ளது." என்று அவர் கூறினார்.

"ஜெய் ஜவான், ஜெய் கிசான், ஜெய் விக்யான் மற்றும் ஜெய் அனுசந்தன்" என்ற மந்திரத்துடன் புதிய இந்தியா முன்னேறி வருகிறது என்று பிரதமர் கூறினார்.

"இந்த அமிர்த காலில் இந்தியாவை உலகளாவிய ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மையமாக மாற்ற வேண்டும். மற்ற மாநிலங்களிலிருந்து சிறந்த நடைமுறைகளை மாநிலங்கள் பின்பற்ற வேண்டும். இது நாட்டில் அறிவியல் தலைமையிலான வளர்ச்சித் திட்டங்களை சரியான நேரத்தில் மற்றும் திறம்பட செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான ஒரு படியாக இருக்கும்." என்று அவர் கூறினார்.

புதுமைகளை ஊக்குவிக்கும் வகையில், மாநில அரசுகள் அதிக அறிவியல் நிறுவனங்களை உருவாக்கவும், செயல்முறைகளை எளிமைப்படுத்தவும் வலியுறுத்த வேண்டும் என்றார் பிரதமர்.

"மாநிலங்களில், பல தேசிய அளவிலான அறிவியல் நிறுவனங்கள் உள்ளன, தேசிய ஆய்வகங்கள் உள்ளன. மாநிலங்கள் அவற்றின் திறன் மற்றும் அவர்களின் நிபுணத்துவத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மாநிலங்களில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களிலும் புத்தக ஆய்வகங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.” என்று பிரதமர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.