எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

உ.பி.யில் மாணவியை சரமாரியாக தாக்கிய ஆசிரியர் இடைநீக்கம்!

உத்தரப் பிரதேசத்தில் வீட்டுப்பாடம் முடிக்காத மாணவியை ஆசிரியர் சரமாரியாக அடித்துத் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

News image
மகளை பள்ளிக்கு அனுப்பியதால் பெற்றோருக்கு நேர்ந்த துயரம்
Updated On :15 செப்டம்பர் 2022, 6:29 am

DIN

உத்தரப் பிரதேசத்தில் வீட்டுப்பாடம் முடிக்காத மாணவியை ஆசிரியர் சரமாரியாக அடித்துத் தாக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தனியார் பள்ளி ஒன்றில் 5-ஆம் வகுப்பு மாணவி, வீட்டுப்பாடம் முடிக்காததால், கன்னம் மற்றும் கைகளில் பலமுறை சரமாரியாகத் தாக்கியுள்ளார். 

இதனால் பலத்த காயமடைந்த மாணவி, தன்னை ஆசிரியர் சரமாரியாக அடித்துவிட்டதாகப் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

பள்ளிக்கு வந்த மாணவியின் தாயார் கன்னங்கள் வீங்கியிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். 

இதையடுத்து, சிறுமியின் தாயார் கிருஷ்ணா நகர் காவல் நிலையத்தில் ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார். 

பள்ளி நிர்வாகம் ஆசிரியரை பணி இடைநீக்கம் செய்து, 2 ஆசிரியர்கள் கொண்ட குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.