பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கரோனா பாதிப்பு! 

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. 

அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு லேசான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளார். 

மருத்துவர்கள் குழு அவரை பரிசோதித்ததில் ராஜ்நாத் சிங் ஓய்வெடுக்க அறிவுறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

தில்லியில் இன்று நடைபெறும் இந்திய விமானப்படைத் தளபதிகள் மாநாட்டில் அவர் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் கரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில், மாநாட்டைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com