பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு லேசான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதையடுத்து அவர் வீட்டு தனிமைப்படுத்துதலில் உள்ளார்.
மருத்துவர்கள் குழு அவரை பரிசோதித்ததில் ராஜ்நாத் சிங் ஓய்வெடுக்க அறிவுறுத்தியதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தில்லியில் இன்று நடைபெறும் இந்திய விமானப்படைத் தளபதிகள் மாநாட்டில் அவர் கலந்துகொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தார். ஆனால் கரோனா வைரஸ் இருப்பது உறுதியான நிலையில், மாநாட்டைத் தவிர்க்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அவர் கூறினார்.