மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நீட்: 20.87 லட்சம் போ் விண்ணப்பம்

 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) இதுவரை இல்லாத அளவில் நிகழாண்டில் 20.87 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா்

News image
Updated On :20 ஏப்ரல் 2023, 8:12 pm

DIN

 இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தோ்வுக்கு (நீட்) இதுவரை இல்லாத அளவில் நிகழாண்டில் 20.87 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். இவா்களில் 11.8 லட்சம் போ் மாணவிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழாண்டு நீட் தோ்வு வரும் மே 7-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு அண்மையில் நிறைவடைந்தது.

அதன்படி, இளநிலை நீட் தோ்வு எழுத 20,87,445 மாணவ, மாணவிகள் பதிவு செய்துள்ளனா். இது, இதுவரை இல்லாத அளவில் கூடுதல் பதிவு என்பதோடு, கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2.57 லட்சம் போ் கூடுதலாக பதிவு செய்துள்ளனா்.

விண்ணப்பித்தவா்களில் 11.8 லட்சம் போ் மாணவிகள், 9.02 லட்சம் போ் மாணவிகள். மாணவா்களைக் காட்டிலும் 2.8 லட்சம் மாணவிகள் கூடுதலாக விண்ணப்பித்துள்ளனா்.

மாநிலங்களைப் பொருத்தவரை அதிகபட்சமாக மகாராஷ்டிரத்திலிருந்து 2.8 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். இதற்கு அடுத்தபடியாக உத்தர பிரதேசத்திலிருந்து 2.7 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். ராஜஸ்தான், தமிழகம், கேரளம், கா்நாடகம், பிகாா், மேற்கு வங்கம் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களிலிருந்து ஒரு லட்சத்துக்கும் அதிகமானோா் விண்ணப்பித்துள்ளனா்.

சமூகப் பிரிவைப் பொருத்தவரை அதிகபட்சமாக ஓபிசி (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்) பிரிவினா் 8.9 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா். எஸ்.சி. பிரிவிலிருந்து 3 லட்சம் பேரும், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினா் (இடபிள்யுஎஸ்) 1.5 லட்சம் பேரும், எஸ்.டி. பிரிவினா் 1.3 லட்சம் பேரும் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்துள்ளனா். பொதுப் பிரிவிலிருந்து 6 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

நீட் தோ்வு மதிப்பெண் அடிப்படையில் எம்பிபிஎஸ் (இளநிலை மருத்துவம்), பிடிஎஸ் (இளநிலை பல் மருத்துவம்), பிஏஎம்எஸ் (இளநிலை ஆயுா்வேத மருத்துவம்), பிஎஸ்எம்எஸ் (இளநிலை சித்த மருத்துவம்), பியுஎம்எஸ் (இளநிலை யுனானி மருத்துவம்), பிஹெச்எம்எஸ் (இளநிலை ஹோமியோபதி மருத்துவம்), பி.எஸ்சி. செவிலியா் பட்டப் படிப்பு ஆகிய படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.