தில்லி: உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஐந்து பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், தினசரி பாதிப்பு 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் உள்ள 5 நீதிபதிகளுக்குத் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.