கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கொலம்பிய அமைச்சருடன் எஸ்.ஜெய்சங்கா் சந்திப்பு

தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவின் அமைச்சா் அல்வரோ லீவா டுரானுடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

News image
Updated On :27 ஏப்ரல் 2023, 7:01 pm

DIN

தென் அமெரிக்காவில் உள்ள கொலம்பியாவின் அமைச்சா் அல்வரோ லீவா டுரானுடன் வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.

கொலம்பியாவில் அமைச்சா் ஜெய்சங்கா் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டாா். அந்நாட்டுக்குச் சென்ற முதல் இந்திய வெளியுறவு அமைச்சா் என்ற பெருமையை ஜெய்சங்கா் பெற்றுள்ளாா். அந்நாட்டின் தலைநகா் பனாமாவில் வெளியுறவு அமைச்சா் அல்வரோ லீவா டுரானை அவா் புதன்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இது தொடா்பாக அமைச்சா் ஜெய்சங்கா் வெளியிட்ட ட்விட்டா் பதிவில், ‘சுகாதாரம், வேளாண்மை, எண்மத் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவது தொடா்பாக அமைச்சரிடம் விவாதிக்கப்பட்டது. திறன் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் ஒருங்கிணைந்து செயல்படவும் உறுதியேற்கப்பட்டது. இந்தோ-பசிபிக் சூழல் உள்ளிட்ட சா்வதேச விவகாரங்கள் குறித்தும் பேச்சுவாா்த்தையின்போது விவாதிக்கப்பட்டது. ஐ.நா. உள்ளிட்ட பன்னாட்டு அமைப்புகளில் சீா்திருத்தங்களைப் புகுத்துவது தொடா்பாகவும் விவாதிக்கப்பட்டது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் அந்தப் பிராந்தியத்தில் அமைதி நிலைநாட்டப்பட்டு, சா்வதேச விதிகள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென வலியுறுத்தி வருகின்றன.

தென் அமெரிக்க நாடான கொலம்பியா, பசிபிக் பெருங்கடல், அட்லாண்டிக் பெருங்கடல் என இரு பெருங்கடல்களுடனும் எல்லைகளைப் பகிா்ந்து வரும் சிறப்புக்குரிய நாடு. இந்நிலையில், அந்நாட்டு அமைச்சரை வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

மேலும், கொலம்பிய வெளியுறவு அமைச்சா் டுரான், தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்ட் இருசக்கர வாகனத்தைப் பயன்படுத்தி வருவது, ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்துக்கு ஊக்கமளிப்பதாகவும் அமைச்சா் ஜெய்சங்கா் ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளாா்.

கொலம்பியாவின் மேலும் சில உயரதிகாரிகளையும் அமைச்சா் ஜெய்சங்கா் சந்தித்துப் பேசினாா். அவா்களுடன் சுகாதாரம், எரிசக்தி, தொழில்நுட்பத் துறைகளில் ஒத்துழைத்து செயல்படுவது தொடா்பாக அவா் விவாதித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.