கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

குஜராத் முதல்வர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தூங்கிய அலுவலர் பணியிடை நீக்கம்

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தூங்கிய நகராட்சி முதன்மை அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :30 ஏப்ரல் 2023, 10:24 am

DIN

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தூங்கிய நகராட்சி முதன்மை அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கட்ச் மாவட்டத்தின் பூஜ் நகராட்சியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டு தங்களது வாழ்வாதரத்தை இழந்த 14 ஆயிரம் பேருக்கு மறுவாழ்வு ஏற்படுத்தும் விதமாக அவர்களுக்கான வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பூஜ் நகராட்சி முதன்மை அலுவலர் ஜிகார் படேல் தூங்கியது கேமராவில் பதிவாகியுள்ளது. இதனையடுத்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது: பணி நேரத்தில் அலட்சியமாக நடந்து கொண்டதால் குஜராத் சிவில் சர்விஸ் சட்டம் 1971 சட்டவிதி 5(1)(a)-ன் கீழ் ஜிகார் படேல் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் எனக் கூறியுள்ளனர்.

இந்த நிகழ்வில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் பேசியதாவது: 2001 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்துக்குப் பிறகு அதில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு வசதிகள் பெரிய அளவில் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி கட்ச் மாவட்டத்தின் மீது தனி பிரியம் வைத்துள்ளார். அவரது வழிகாட்டுதலின் கீழ் கட்ச் மாவட்டம் பல கடினமான தருணங்களில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.