காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி லடாக்கிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 2019 ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டு லடாக் யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. அதன்பின், முதல் முறையாக ராகுல் காந்தி லடாக்கிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார். அடுத்த வாரம் அவர் கார்கில் செல்ல உள்ளதாகவும் கூறப்படுகிறது. இரண்டு நாள் பயணமாக லடாக்கின் லேவிற்கு நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 17) ராகுல் காந்தி சென்றடைந்தார். அதன்பின் அவர் தனது இந்த சுற்றுப்பயணத்தை பாங்காங் ஏரி, நுப்ரா பள்ளத்தாக்கு மற்றும் கார்கில் பகுதிகளுக்கு செல்வதற்காக மேலும் நான்கு நாள்களுக்கு நீட்டித்துள்ளார்.