தங்கத்துக்கு மாறுவேடம்.. தில்லி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்

குவைத்தில் இருந்து வெள்ளி முலாம் பூசி கொண்டு வரப்பட்ட 4 கிலோ தங்கத்தை தில்லி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
தங்கத்துக்கு மாறுவேடம்.. தில்லி விமான நிலையத்தில் 4 கிலோ தங்கம் பறிமுதல்


புது தில்லி: குவைத்தில் இருந்து வெள்ளி முலாம் பூசி கொண்டு வரப்பட்ட 4 கிலோ தங்கத்தை தில்லி விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

புது தில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் குவைத்தில் இருந்து வந்த மூன்று பயணிகளின் உடைமைகளை சோதனை  செய்ததில் அவர்களிடம் 4001 கிராம் தங்க நகைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு ரூ.2.06 கோடி என்று கணக்கிடப்பட்டுளள்து.

இது குறித்து தில்லி சுங்கத்துறை தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, வெள்ளி முலாம் பூசப்பட்ட 4001 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.  இதன் மதிப்பு ரூ.2.06 கோடி என்று கணக்கிடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் குவைத் நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரபு நாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி வருவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சுங்கத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்த போதும், விதவிதமாக தங்கக் கடத்தல் நடந்து வருகிறது. தற்போது, தங்க நகைகளை, வெள்ளி முலாம் பூசி கடத்தியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com