மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது: சுப்ரியா சுலே

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

News image
Updated On :3 டிசம்பர் 2023, 10:38 am

சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் (சரத் பவார் பிரிவு) சேர்ந்த தலைவர் சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.

ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலங்கானா மற்றும் மிஸோரம் ஆகிய ஐந்து மாநில சட்டப்பேரவைகளுக்கான தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கான முன்னோட்டமாக இந்த ஐந்து மாநிலத் தேர்தல்கள் பார்க்கப்படுகின்றன. 

இவற்றில் மிஸோரம் மாநிலத்திற்கு மட்டும் வாக்கு எண்ணிக்கை நாளை (டிச.4) நடைபெறுகிறது. மற்ற நான்கு மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (டிச. 3) காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் பாஜக முன்னிலையில் உள்ளது. தெலங்கானாவில் மட்டுமே காங்கிரஸ் கட்சி முன்னிலையில் நீடித்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தலைவர் சுப்ரியா சுலே கூறியதாவது, “மக்களவைத் தேர்தலும், சட்டப்பேரவைத் தேர்தல்களும் வேறுபட்டவை. இந்தத் தேர்தல் முடிவுகள் மக்களவைத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று சொல்ல முடியாது.

2018-ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றியடைந்தது. ஆனால் 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வேறு மாதிரியாக அமைந்தது. அதனால் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களை மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டமாக கருத இயலாது.” என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.