பிரதமரை சந்திக்கவுள்ள மம்தா பானர்ஜி; காரணம் என்ன?
மேற்கு வங்கத்துக்கான நிதியை பகிர்ந்தளிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளார்.


மேற்கு வங்கத்துக்கான நிதியை பகிர்ந்தளிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளார்.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அண்மையில் மாநில அரசின் திட்டங்களுக்கு மத்திய அரசு நிதியளிப்பதை நிறுத்திவிட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், மத்திய அரசு மேற்கு வங்கத்துக்கு 1.15 லட்சம் கோடி ரூபாய் நிதியளிக்க வேண்டியிருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.
இதையும் படிக்க: மேற்கு வங்க போக்குவரத்து துறையின் வருவாய் ரு.4 ஆயிரம் கோடி!
இந்த நிலையில், மேற்கு வங்கத்துக்கான நிதியை பகிர்ந்தளிப்பது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் மம்தா பானர்ஜி சந்திக்கவுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சார்பில் தெரிவித்திருப்பதாவது: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, பிரமர் நரேந்திர மோடியை சந்திப்பதற்கு பிரதமர் அலுவலகம் ஒப்புதல் அளித்துள்ளது. பிரதமர் மற்றும் மம்தா பானர்ஜியின் சந்திப்பு வருகிற டிசம்பர் 20 ஆம் தேதி முற்பகலில் நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...