இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள்: 20 ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்களுக்கு நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ்

தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்ட 20 ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்களுக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 டிசம்பர் 2023, 2:19 am

DIN


புது தில்லி: தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்ட 20 ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்களுக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் (சிசிபிஏ) நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை இணையமைச்சா் அஸ்வினி குமாா் செளபே எழுத்துபூா்வமாக அளித்துள்ள பதில்:

முற்போக்கான சட்டங்களை இயற்றுவதன் மூலம் நுகா்வோரின் பாதுகாப்புக்கும், அவா்களுக்கு அதிகாரமளிக்கவும் மத்திய நுகா்வோா் விவகாரங்கள் துறை தொடா்ந்து பணியாற்றி வருகிறது.

உலகமயமாக்கல், தொழில்நுட்பங்கள், இணையவழி வா்த்தகம் உள்ளிட்டவை அடங்கிய புதிய காலகட்டத்தில், நுகா்வோா் பாதுகாப்பை நிா்வகிக்கும் கட்டமைப்பை நவீனப்படுத்தும் நோக்கில், 1986-ஆம் ஆண்டின் நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் ரத்து செய்யப்பட்டு புதிய நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்தப் புதிய சட்டத்தின் கீழ், நுகா்வோா் உரிமைகள், நியாயமற்ற வணிக நடவடிக்கைகள், பொய்யான அல்லது தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு எதிரான விவகாரங்களை ஒழுங்குபடுத்த சிசிபிஏ உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், தவறாக வழிநடத்தும் விளம்பரங்களை வெளியிட்ட 20 ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்களுக்கு சிசிபிஏ நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அத்தகைய விளம்பரங்களை வெளியிட்டதற்காக 8 ஐஏஎஸ் பயிற்சி நிறுவனங்களுக்கு சிசிபிஏ அபராதம் விதித்துள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.