குருகிராம்: ஹரியானா மாநிலம் குருகிராமில் உள்ள பசாய் சாலையில் உள்ள மெத்தை கிடங்கில் இன்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் யாருக்கும் உயிர்ச்சேதமோ, காயமோ ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 6 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ள நிலையில், இது குறித்து காவல் துறையினர் வழக்கு பதித்து விசாரித்து வருகின்றனர்.