மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மாற்றே இல்லை: அஜித் பவார்

வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மாற்றே இல்லை என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்தார்.

News image
அஜித் பவார் (கோப்புப்படம்)
Updated On :25 டிசம்பர் 2023, 3:13 pm

DIN

வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடிக்கு மாற்றே இல்லை என்று மகாராஷ்டிர துணை முதல்வர் அஜித் பவார் தெரிவித்தார்.

வரவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக மோடியின் தலைமைக்கு சவால் விடுக்கும் வகையில் ஒன்றிணைந்துள்ள எதிர்க்கட்சிகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அவர், எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிதான் என்று கூறினார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, “இப்போது நீங்கள் எதையுமே யூகிக்க வேண்டாம். நான் ஜோசியம் கூறுபவன் இல்லை. இருந்தாலும் தேர்தல் நெருங்குகையில் என்ன நடக்கும் என்பதை சொல்கிறேன். எதிர்க்கட்சிகளின் மகா கூட்டணிக்கு எதிரான பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியே ஆவார். 

பிரதமர் மோடிக்கு இணையானவர்களாக யாருமே இல்லை. தற்போது நாட்டில் மோடிக்கு மாற்றாக யாரும் கிடையாது. இந்திய தேசத்தின் பிரதமர் பதவிக்கு மிகவும் பொருத்தமான மோடிதான்.” என்று தெரிவித்தார். 

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் சூழலில் பாஜகவின் கையே ஓங்கியுள்ளது. மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மூன்று முக்கியமான இந்தி மாநிலங்களில் வெற்றியடைந்த பிறகு, 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை எதிர்கொள்ளும் வகையில் பாரதிய ஜனதா கட்சி தனது நிலையை வலுப்படுத்தியுள்ளது என்று பார்க்கப்படுகிறது.

சமீபத்தில் முடிவடைந்த சட்டப்பேரவைத் தேர்தல்களின்போது, ​​பாஜகவின் முக்கிய முகமாக பிரதமர் மோடியே நின்றார். எனவே மற்ற தலைவர்களை ஓரங்கட்டுவது குறித்த எந்தக் கவலையும் இருக்காது என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.