திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: முதல்வர் விஜய் வாழ்த்துதிருச்சி மாவட்ட ஆட்சியர் இருக்கையில் அமர்ந்து ரீல்ஸ்! வைரலாகும் விடியோஇன்று ஜூன்20 தங்கம் வாங்கலாமா? நேற்று குறைந்த விலை இன்று என்னவானது? அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்திநீட் மறுதேர்வே துயரம், அதில் இதுவுமா? நாக்பூர் மாணவருக்கு அபுதாபியில் தேர்வு மையம்குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்து
/

பிருந்தா காரத்தின் கருத்துக்கு மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி பதில்!

ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு ராமரால் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே வருவார்கள் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார். 

News image
Updated On :26 டிசம்பர் 2023, 5:10 pm IST

ராமர் கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு ராமரால் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே வருவார்கள் என்று மத்திய அமைச்சர் மீனாட்சி லேகி தெரிவித்துள்ளார். 

உத்தரப் பிரதேசத்தின் அயோத்தியில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோயிலுக்கான குடமுழுக்கு நிகழ்வு பிரமாண்டமாக நடைபெற உள்ளது. இதற்கு கோயில் கட்டும் கமிட்டியின் சார்பில் பல்வேறு முக்கியப் பிரமுகர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் மீனாட்சி லேகி இவ்வாறு கூறியுள்ளார்.

செவ்வாய்க்கிழமை அவர் பேசியதாவது, “அனைவருக்கும் அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால் ராமரால் அழைக்கப்பட்டவர்கள் மட்டுமே கோயில் குடமுழுக்கு நிகழ்ச்சிக்கு வருவார்கள்.” என்று கூறியுள்ளார். 

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பிருந்தா காரத்தின் கருத்துக்கு மறைமுகமாக பதிலளிக்கும் விதமாகவே பாஜகவைச் சேர்ந்த மத்திய அமைச்சர் மீனாட்சி லெகி இவ்வாறு கூறியதாக கருதப்படுகிறது.

முன்னதாக, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் பிருந்தா காரத், “மக்களின் மத உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் பாஜகவினர் மதத்தை அரசியலுடன் இணைக்கின்றனர். இது ஒரு மத நிகழ்ச்சி. இந்த மத நிகழ்ச்சியை பாஜகவினர் அரசியலாக்க முயற்சிக்கின்றனர். இது சரியல்ல. எனவே எங்கள் கட்சி இந்த விழாவில் கலந்துகொள்ளாது.

மதத்தையும், அரசியலையும் தனித்தனியாக வைக்க வேண்டும். இரண்டையும் கலப்பது ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் திட்டமாகும். மதத்தை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்துவது மிகவும் தவறாகும். அரசியலுக்காக மதம் பயன்படுத்தப்படும்போது மதம் அதற்கான மரியாதையை இழக்கிறது.” என்று என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.