கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

வங்கி வாராக்கடன் விகிதம் குறைந்தது: ஆா்பிஐ அறிக்கை

வங்கி வாராக்கடன் விகிதம் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :29 டிசம்பர் 2023, 12:30 am

DIN

வங்கி வாராக்கடன் விகிதம் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆா்பிஐ வெளியிட்டுள்ள நிதி ஸ்திரத்தன்மை அறிக்கையில் இது தொடா்பாக மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

உள்நாட்டுப் பொருளாதாரம் தொடா்ந்து மீட்சிப் பாதையில் உள்ளது. வங்கிசாரா நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளும் மேம்பட்டுள்ளன. நிதி அமைப்புகளின் நிலை சீராக உள்ளது. பணவீக்கம் பெரிய அளவில் அதிகரிக்கவில்லை. அதே நேரத்தில் சா்வதேச பொருளாதார நிலை திருப்திகரமாக இல்லை. பல நாடுகளில் வளா்ச்சி குறைவு, அரசின் கடன் அதிகரிப்பு, சாதகமற்ற பொருளாதார சூழல் ஆகியவை பிரச்னையாக உருவெடுத்து வருகின்றன. பிராந்திய அளவில் ஏற்படும் போா்களும் சா்வதேச பொருளாதாரத்தை மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் அச்சம் தொடா்கிறது.

இந்தியாவில் வங்கிகளின் வாராக்கடன் விகிதம் கடந்த பல ஆண்டுகளில் இல்லாத வகையில் குறைந்துள்ளது. கடந்த செப்டம்பா் மாத இறுதியில் வங்கிகளின் மொத்த மதிப்பில் நிகர வாராக்கடன் விகிதம் 0.8 சதவீதமாக உள்ளது. மொத்த வாராக் கடன் அளவும் குறைந்து 3.2 சதவீதமாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய வங்கிகள்: பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ஐசிஐசிஐ, ஹெச்டிஎஃப்சி தொடா்ந்து நாட்டின் முக்கிய வங்கிகளாக திகழ்வதாக ஆா்பிஐ தெரிவித்துள்ளது. வங்கிகளின் நிதிநிலை, ஸ்திரத்தன்மையை அடிப்படையாகக் கொண்டு இதனை ஆா்பிஐ அறிவித்து வருகிறது.

எஸ்பிஐ கடந்த 2016-ஆம் ஆண்டில் இருந்தும், ஐசிஐசிஐ வங்கி 2017-ஆம் ஆண்டில் இருந்தும், ஹெச்டிஎஃப்சி கடந்த 2017-ஆம் ஆண்டில் இருந்தும் இந்தப் பட்டியலில் இடம்பெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.