
மும்பை: மும்பை மாநகராட்சி பகுதியில் சொத்துகளின் பதிவு ஆண்டுக்கு 33 சதவிகிதம் அதிகரித்து வருவதாக ரியல் எஸ்டேட் ஆலோசகரான நைட் ஃபிராங்க் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் மும்பை நகரில் 9,367 சொத்துக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ரியல் எஸ்டேட் ஆலோசகரான நைட் ஃபிராங்க் மகாராஷ்டிர அரசின் பதிவுகள் மற்றும் முத்திரைத் துறையிலிருந்து சமீபத்திய தரவுகளைத் தொகுத்து வெளியிட்டது:
தரவுகளின்படி, டிசம்பர் மாதத்தின் இதுவரை 12,134 யூனிட்டுகள் பதிவாகிய நிலையில், இது 12,500 யூனிட்டுகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவு செய்யப்பட்ட மொத்த சொத்துக்களில், குடியிருப்பு வீடுகள் 80 சதவிகிதம் உள்ள நிலையில், பத்திரபதிவு வழியாக ரூ.10,000 கோடிக்கு மேல் வருவாய் ஈட்ட வழிவகுக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.