உலக வானொலி நாளையொட்டி மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்
உலக வானொலி நாளையொட்டி பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “வானொலி நேயர்கள், தொகுப்பாளர்கள் மற்றும் ஒலிபரப்புடன் தொடர்புடைய அனைவருக்கும் வாழ்த்துகள். புதுமையான நிகழ்ச்சிகளின் வாயிலாகவும், மனித படைப்பாற்றலை வெளிப்படுத்தியும் ஏராளமானோரின் வாழ்வை வானொலி தொடர்ந்து ஒளிமயமாக்கட்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
“உலக வானொலி நாளையொட்டி வரும் 26 ஆம் தேதி ஒலிபரப்பாகவுள்ள மனதின் குரல் நிகழ்ச்சியின் 98 ஆவது பதிப்பு பற்றி உங்களது கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளுமாறு மக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார். MyGov, NaMo App செயலியின் மூலம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம் அல்லது 1800-11-7800 எண்ணைத் தொடர்பு கொண்டு உங்களது கருத்துகளைப் பதிவு செய்யலாம்.” என்று மோடி கூறியுள்ளார்.