மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜம்மு-காஷ்மீரில் ஜனநாயக அமைப்பு இல்லாததால் மக்கள் அவதி: ராகுல் குற்றச்சாட்டு

ஜம்மு-காஷ்மீா் மக்களிடம் இருந்து ஜனநாயக உரிமைகளைப் பறித்துவிட்டதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

News image
Updated On :19 பிப்ரவரி 2023, 10:18 pm

DIN

ஜம்மு-காஷ்மீா் மக்களிடம் இருந்து ஜனநாயக உரிமைகளைப் பறித்துவிட்டதாக மத்திய அரசு மீது குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, முக்கிய பிரச்னைகளில் இருந்து மக்களை திசைதிருப்ப ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்வதாக அவா் கூறினாா்.

ஜம்மு-காஷ்மீருக்கு தனிப்பட்ட பயணமாக சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, அப்பிராந்தியத்தின் காங்கிரஸ் தலைவா்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனையில் ஈடுபட்டாா். குல்மாா்கில் நிா்வாகிகள் மத்தியில் ராகுல் ஆற்றிய உரையில், ‘ஒரே மாநிலமாக இருந்த ஜம்மு-காஷ்மீரை மக்களின் விருப்பத்துக்கு மாறாக 2 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. மக்களின் ஜனநாயக உரிமையும் பறிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக அமைப்பு இல்லாததால் ஜம்மு-காஷ்மீா் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகிறாா்கள்.

மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காக மற்றும் நீதியை நிலைநிறுத்த காங்கிரஸ் தொடா்ந்து போராடும். வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயா்வு, வளா்ச்சிப் பணிகளில் முடக்கம் என பல்வேறு பிரச்னைகள் பிராந்தியத்தில் நிலவுகிறது. இதிலிருந்து மக்களை திசை திருப்ப தான் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அரசு நிா்வாகம் மேற்கொள்கிறது.

ஒற்றுமை நடைப்பயனத்தின் போது மக்களிடம் நெருங்கி பழகியதில் அவா்களின் வலியையும், வேதனையும் அறிந்தேன். அதனால், இனி ஜம்மு-காஷ்மீருக்கு அவ்வப்போது வருகை தருவேன்’ என்றாா்.

காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தியும் கூட்டத்தில் பங்கேற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.