சிபிஐ அதிகாரிகளின் அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்க நான் அவகாசம் கேட்டுள்ளேன். பாஜக தில்லித் தேர்தலில் தோற்றுவிட்டது. அதனால், அவர்கள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர். அவர்கள் சிபிஐ அமைப்பினைப் பயன்படுத்தி பழிவாங்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் என்னை கைது செய்யும் வரை ஓயமாட்டார்கள் என்பதில் உறுதியாக இருக்கிறேன். நான் எப்போதும் சிபிஐ விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறேன். இப்போதும் சிபிஐக்கு ஒத்துழைப்பு கொடுக்கத் தயாராக உள்ளேன். ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்யும் பணிகள் இருப்பதால் எனக்கு கால அவகாசம் வேண்டும் என்றார்.