கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

‘இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பதே எங்கள் போராட்டம்’: காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா மீது பாஜக அளித்த புகாரின் பேரில் அசாம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News image

‘இந்திய அரசியலமைப்பை பாதுகாப்பதே எங்கள் போராட்டம்’: காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா

Updated On :23 பிப்ரவரி 2023, 1:30 pm

DIN

பிரதமர் நரேந்திர மோடி குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா மீது பாஜக அளித்த புகாரின் பேரில் அசாம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அசாம் காவல்துறையினர் கேட்டுக் கொண்டதன் பேரில் தில்லியில் இருந்து சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் செல்லும் இண்டிகோ விமானத்தில் இருந்து பவன் கேரா இறக்கி விடப்பட்டு கைது செய்யப்பட்டார். 

இதுதொடர்பாக பவன் கேராவுக்கு இடைக்கால ஜாமீன் வழங்க தில்லி நீதிமன்றத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஜாமீன் பெற்ற பின் செய்தியாளர்களை சந்தித்த பவன் கேரா, “நாட்டைப் பாதுகாப்பதற்கான போராட்டம் எங்களுடையது. அரசியலமைப்பின் விழுமியங்களைப் பாதுகாப்பதற்கான போராட்டம் எங்களுடையது. எங்களுடைய தலைவர் ராகுல்காந்தி அச்சமின்றி இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளார். அவரின் கரங்களை வலுப்படுத்துவேன்.

எந்தவித சட்டத்தையும், வழிகாட்டுதலையும் பின்பற்றாமல் தவறான வழியில் என்னை அசாம் காவல்துறையினர் கைது செய்தனர். என்னுடைய கருத்துரிமையை நீதிமன்றம் பாதுகாத்ததன் மூலம் நீதித்துறையின் மீது நான் முழுமையான நம்பிக்கை கொண்டவனாக உணர்கிறேன்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.