இந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

அணுமின் நிலையங்கள் கட்டமைக்கும் பணியில் பொதுத்துறை நிறுவனங்கள்: மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்

அணுமின் நிலையங்களைக் கட்டமைக்கும் பணியில் பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :3 ஜனவரி 2023, 7:28 pm

DIN

அணுமின் நிலையங்களைக் கட்டமைக்கும் பணியில் பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாக மத்திய அணுசக்தித் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் அவா் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: அணுசக்தித் துறையில் பொதுத்துறை நிறுவனங்களுடன் கூட்டு முயற்சிகள் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. அணுமின் நிலையங்களைக் கட்டமைப்பதற்கு நிதி ஆதாரங்களை உருவாக்கும் நோக்கில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

2070-ஆம் ஆண்டுக்குள் கரியமில வாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்ஸைட் போன்ற பசுமை இல்ல வாயுக்கள் வெளியேற்றத்தை அடிமட்ட அளவுக்கு குறைக்க வேண்டும் என்ற இலக்கை அடையும் நோக்கில், அணுமின் நிலையங்களைக் கட்டமைக்கும் பணியில் பொதுத்துறை நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட உள்ளன.

தற்போது வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அணுமின் நிலையங்களை மத்திய அரசு கட்டமைத்து வருகிறது என்று தெரிவித்தாா்.

இந்தியாவில் தற்போது உள்ள அணுமின் நிலையங்களின் உற்பத்தித் திறன் 6,780 மெகா வாட்டாக உள்ளது. இந்நிலையில், 2031-ஆம் ஆண்டுக்குள் மேலும் 21 அணுமின் நிலையங்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அவற்றின் மூலம் கூடுதலாக 15,700 மெகா வாட் மின்சாரம் கிடைக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.