இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

 உலகம் முழுவதிலும் கரோனா என்ன செய்து கொண்டிருக்கிறது? ஸ்பாட் நிலவரம்

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 0.1 சதவீதமாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

News image
 உலகம் முழுவதிலும் கரோனா என்ன செய்து கொண்டிருக்கிறது? ஸ்பாட் நிலவரம்
Updated On :7 ஜனவரி 2023, 12:34 pm

DIN


புது தில்லி: நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா உறுதி செய்யப்படும் விகிதம் 0.1 சதவீதமாக இருப்பதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அதாவது, கடந்த 24 மணிநேரத்தில் 1.9 லட்சம் பரிசோதனை நடத்தப்பட்டதில், 228  (0.1%) பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

திங்கள்கிழமை (173), செவ்வாய் (734), புதன் (175), வியாழன் (188) பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. இன்று புதிதாக 214 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ரேண்டம் முறையில் அதாவது 2 சதவீதம் பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

சீன அரசின் கரோனா கட்டுப்பாட்டுக் கொள்கைகளைக் கடுமையாக விமரிசித்த சுமார் 1000க்கும் மேற்பட்ட சமூக வலைத்தளப் பக்கங்கள் முடக்கப்பட்டுள்ளன.

ஜனவரி 6ஆம் தேதி சீனத்தில் கரோனா பாதித்த மூன்று பேர் பலியானதாகத் தகவல் தெரிவித்துள்ளது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட எம்ஆர்என்ஏ வகை தடுப்பூசி சோதனை முறையில் செலுத்தப்பட்டு வருகிறது.

சீனாவிலிருந்து வருவோருக்கு கரோனா பரிசோதனை செய்ய நெதர்லாந்து முடிவு செய்திருக்கிறது.

டிசம்பர் 26ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை உலகம் முழுவதும் 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனா பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றனர். சுமார் 10 ஆயிரம் பேர் மரணமடைந்திருக்கிறார்கள். இது கடந்த வாரத்தைக் காட்டிலும் குறைவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.