பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

காப்பீட்டுப் பணத்துக்காக ஓட்டுநரைக் கொன்று நாடகமாடிய அரசு ஊழியர்; கைப்பேசியை மறந்ததால் சிக்கினார்

தனது கார் ஓட்டுநரைக் கொன்றுவிட்டு, தான் இறந்தது போல நாடகமாடிய அரசு ஊழியர், தனது கைப்பேசி மூலமே சிக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

News image
காப்பீட்டுப் பணத்துக்காக ஓட்டுநரைக் கொன்று நாடகமாடிய அரசு ஊழியர்; கைப்பேசியை மறந்ததால் சிக்கினார்
Updated On :17 ஜனவரி 2023, 11:08 am

DIN


ஹைதராபாத்: தனது கார் ஓட்டுநரைக் கொன்றுவிட்டு, தான் இறந்தது போல நாடகமாடிய அரசு ஊழியர், தனது கைப்பேசி மூலமே சிக்கிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

தெலங்கானா அரசு ஊழியர் தர்மா (48). தெலங்கானா அரசுத் தலைமைச் செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் எரிந்த நிலையில், காரில் கண்டெடக்கப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அவர் உயிரோடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஒரு வாரத்துக்கு முன்பு, மேதக் மாவட்டத்தில் அவரது எரிந்த கார் நின்று கொண்டிருந்தது. அதில், ஒரு உடல் எரிந்த நிலையில் இருந்தது. அந்த உடலுடன் இருந்த பையில் தர்மாவின் அடையாள அட்டைகள் இருந்துள்ளன. இதனைக் கொண்டு மர்ம மரணம் என்ற அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.

காரின் எண்ணை வைத்து அது தர்மாவினுடையது என்று கண்டுபிடிக்கப்பட்டது. அதில் எரிந்த உடல் தர்மாவினுடையது என்றும் காவல்துறையினர் கருதினர்.

இந்த நிலையில்தான், விசாரணை நடத்தி வந்த காவல்துறையினர், தர்மாவின் செல்லிடப்பேசி கோவாவிலிருந்து இயங்கியதை கண்டுபிடித்தனர். அங்கு நேரில் சென்று பார்த்த போது தர்மா உயிரோடு இருந்தார். அவர் கைது செய்யப்பட்டு ஹைதராபாத் அழைத்து வரப்பட்டார்.

விசாரணையில், பந்தயத்தில் நிறைய ஏமாந்ததால் கடன் அதிகமாகியதாகவும், அதனை அடைக்க, தனது கார் ஓட்டுநரைக் கொன்று தானே இறந்ததாக நாடகமாடி, காப்பீட்டுத் தொகையை பெற்று கடனை அடைக்க முடிவு செய்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.