கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஜோஷிமட் நகரில் 70 % மக்கள் இயல்பு வாழ்க்கையில் உள்ளனா்- முதல்வா் புஷ்கா் சிங் தாமி

உத்தரகண்ட் மாநிலத்தில் புதைந்து வரும் ஜோஷிமட் நகரத்தில் வசித்து வரும் 65 முதல் 70 சதவீத மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்வதாக அம்மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்தாா்.

News image
Updated On :19 ஜனவரி 2023, 2:15 am

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் புதைந்து வரும் ஜோஷிமட் நகரத்தில் வசித்து வரும் 65 முதல் 70 சதவீத மக்கள் இயல்பு வாழ்க்கை வாழ்வதாக அம்மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தெரிவித்தாா்.

இந்நகரம் நிலத்தில் புதைந்து வருவதால் வீடுகள், சாலைகள் உள்ளிட்டவற்றில் வெடிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்தப் பாதிப்புகளின் காரணமாக பாதிக்கப்பட்ட குடியிருப்புகளின் எண்ணிக்கை 849-ஆக அதிகரித்துள்ளது. 250 குடும்பங்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை மாநில முதல்வா் புஷ்கா் சிங் தாமி தில்லியில் புதன்கிழமை சந்தித்தாா். அப்போது, ஜோஷிமட் நகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து மத்திய அமைச்சரிடம் தாமி விளக்கினாா்.

அமித் ஷா உடனான சந்திப்புக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த உத்தரகண்ட் முதல்வா் தாமி கூறியதாவது:

ஜோஷிமட் நகரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரண மற்றும் மறுகுடியமா்வு பணிகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சரிடம் விளக்கினேன். அனைத்து விதமான உதவிக்கும் மத்திய அரசு துணை நிற்கும் என அவா் உறுதியளித்தாா். ஜோஷிமட் நகரத்தில் உள்ள 65 முதல் 70 சதவீத மக்கள் இயல்பு வாழ்க்கையைத் தொடருகின்றனா். சுற்றுலாத் தலமான அவுலியில் சுற்றுலாப் பயணிகள் வழக்கம் போல் வருகை புரிகின்றனா்.

கேதா்நாத், பத்ரிநாத் உள்ளிட்ட 4 புனித தலங்களுக்கான சாா் தாம் யாத்திரை ஜோஷிமட் வழியே அடுத்த 4 மாதங்களில் தொடங்கும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.