திரிணமூல் காங்கிரஸ் கட்சி அமைதியை விரும்புவதாக அக்கட்சியின் தலைவர் மதன் மித்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதவாது, டிஎம்சி தொழிலாளர்கள் தங்களைத் தாக்கியதாக இந்திய மதசார்பற்ற முன்னணி செயல்பாட்டாளர்களின் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறேன். மேலும் தனது கட்சி அமைதியை விரும்புகிறது. கலவரங்களில் நம்பிக்கை இல்லை. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாற்றத்தை விரும்புகிறார். பழிவாங்கலை அல்ல.
இதையும் படிக்க- கம்பம்: செங்கல் காளவாசல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம்
பங்கர் பகுதி கலவரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலவரத்தை தொடங்கியவர் யார் என்பது விரைவில் நிரூபணமாகும். இவ்வாறு அவர் குறிப்பிட்டார். கடந்த வெள்ளிக்கிழமை தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் அமைந்துள்ள பங்கர் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி தொண்டர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
இருத் தரப்பினரும் ஒருவரையொருவர் தடி மற்றும் செங்கற்களால் தாக்கிக் கொண்டனர். நாட்டு வெடிகுண்டுகளும் வீசப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இச்சம்பவத்தில் பல வாகனங்கள் சேதமடைந்தன. பின்னர், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.