சிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

நினைவுச் சின்னங்கள் தேர்வு குறித்து அரசு விரிவான நடைமுறையை கொண்டுவர வேண்டும்: பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு

முக்கியத்துவம் வாய்ந்த புராதன தேசியச் சின்னங்களைத் தேர்வு செய்வதில் விரிவான செயல்முறைகள் பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

News image
Updated On :6 பிப்ரவரி 2024, 6:24 pm IST

முக்கியத்துவம் வாய்ந்த புராதன தேசியச் சின்னங்களைத் தேர்வு செய்வதில் விரிவான செயல்முறைகள் பின்பற்றப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ஆலோசனை வழங்கியுள்ளது.

இது குறித்து பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு ”தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச் சின்னங்கள் - உடனடியாக பாதுகாக்கப்பட வேண்டும்”  என்ற தலைப்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் பிரதமருக்கான பொருளாதாரக் குழு கூறியிருப்பதாவது: நாட்டில் உள்ள நினைவுச் சின்னங்களை பராமரிக்கவும், பாதுகாக்கவும் போதுமான அளவுக்கு நிதி ஒதுக்கப்படுவதில்லை. இந்தியத் தொல்லியல் துறை தேசிய அளவிலான நினைவுச் சின்னங்களை அறிவிப்பதற்கு சரியான விதிமுறைகளை கொண்டுவர வேண்டும். அந்த நினைவுச் சின்னம் எதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறது என்பதனையும் அரசு விரிவாக குறிப்பிட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. 

இந்தியாவில் தற்போது 3,695 நினைவுச் சின்னங்கள் இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.