மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

வேகமாக தயாராகி வரும் சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலை

அதிவிரைவுச் சாலையின் 15 சதவீதம் அதாவது தமிழகத்தின் பகுதியில் அமைந்த 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
தயாராகி வரும் சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலை
Updated On :27 ஜனவரி 2023, 10:55 am

DIN

சென்னை: சென்னை- பெங்களூரு இடையேயான 96 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட அதிவிரைவுச் சாலையின் 15 சதவீதம் அதாவது தமிழகத்தின் பகுதியில் அமைந்த 14 கிலோ மீட்டர் தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் நிறைவு பெற்றிருப்பதாக் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தரப்பில் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வரும் 15 - 16 மாதங்களில், ஒட்டுமொத்தமாக சென்னை - பெங்களூரு அதிவிரைவுச் சாலை தயாராகிவிடும் என்கிறார்கள்.

மழையின் போது இப்பணிகளைத் தொடர்வது சவாலாக இருந்தது. குளங்கள் மற்றும் ஏரிகள் நிரம்பியதால், இப்பணிகளில் தொய்வு கடினமாக இருந்தது, ஆனால் இப்போது தண்ணீர் குறையத் தொடங்கியதால், நீர்நிலைகளால் சிக்கல் ஏற்படுவது தவிர்க்கப்பட்டுள்ளது”என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் இந்த திட்டத்துக்காக 833 ஏக்கர் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 95 சதவீத இடங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்படிருந்தது.  மீதம் விரைவில் கையகப்படுத்துப்படும். தமிழகத்தில் நடந்து வரும் சாலை அமைக்கும் பணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. 24 கிலோ மீட்டர் தொலைவுள்ள குடிபாலா - வாலாஜாபேட்டை, 24 கிலோ மீட்டர் தொலைவுள்ள வாலாஜாபேட்டை - அரக்கோணம், 25 கிலோ மீட்டர் தொலைவுள்ள அரக்கோணம் - காஞ்சிபுரம், 32 கிலோ மீட்டர் தொலைவுள்ள காஞ்சிபுரம் - ஸ்ரீபெரும்புதூர் என பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

இதில் 10 கிலோ மீட்டர் தொலைவுள்ள சாலை ஆந்திர மாநிலத்துக்குள் வருகிறது. இந்த சாலையில் தமிழகத்தில் மட்டும் 54 மேம்பாலங்கள், 13 வாகன சுரங்கப் பாதைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் அமைக்கப்படவிருக்கின்றன.

இந்தச் சாலை, கர்நாடகம், ஆந்திரம் தமிழ்நாடு ஆகியவற்றை ஒன்றாக இணைக்கும் வகையில் உருவாகி வருகிறது. ரூ.16,730 கோடியில் உருவாகி வரும் இந்தச் சாலை தயாராகிவிட்டால், பெங்களூரு - சென்னை இடையேயான பயண நேரம் 2 முதல் 3 மணி நேரம் குறைந்துவிடும். தற்போதுள்ள 326 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க ஐந்து முதல் ஏழு மணி நேரம் ஆகிறது. இந்தப் பாதையை நாள் ஒன்றுக்கு 75 ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்கின்றன என்பது புள்ளிவிவரம்.

தமிழகத்தில் மட்டும் ஏழு மாவட்டங்களை இந்த நெடுஞ்சாலை கடந்து செல்லும். இதனால், சென்னை - பெங்களூரு தொழில்வளம் அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.