திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விமான நிலையங்கள் கிடைக்குமா?

பாஜக ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து வருவதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வளர்ச்சிகள் இருக்காது எனவும் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 

News image

ஜோதிராதித்ய சிந்தியா (கோப்புப் படம்)

Updated On :22 ஜூலை 2023, 8:55 pm IST


பாஜக ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து வருவதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வளர்ச்சிகள் இருக்காது எனவும் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் பார்வை இந்தியாவை புதிய இடத்துக்கு எடுத்துச்செல்கிறது. நாம் தற்போது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறோம். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தால், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மேம்பாலங்கள் கிடைத்திருக்குமா என கேள்வி எழுப்பினார். 

முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தலைமையிலான அரசால் மாநிலம் வளர்ச்சி அடைந்து வருவதாகக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.