/

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் விமான நிலையங்கள் கிடைக்குமா?

பாஜக ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து வருவதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வளர்ச்சிகள் இருக்காது எனவும் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 

News image

ஜோதிராதித்ய சிந்தியா (கோப்புப் படம்)

Updated On :22 ஜூலை 2023, 3:25 pm

DIN


பாஜக ஆட்சியில் நாடு வளர்ச்சியடைந்து வருவதாகவும், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், வளர்ச்சிகள் இருக்காது எனவும் மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 

மத்தியப் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் நரேந்திர மோடியின் பார்வை இந்தியாவை புதிய இடத்துக்கு எடுத்துச்செல்கிறது. நாம் தற்போது சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டு வருகிறோம். மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்திருந்தால், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள், மேம்பாலங்கள் கிடைத்திருக்குமா என கேள்வி எழுப்பினார். 

முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் தலைமையிலான அரசால் மாநிலம் வளர்ச்சி அடைந்து வருவதாகக் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.