மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அதானி கேபிடல் நிறுவனத்தை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்ற அதானி

அதானி கேபிடலை அமெரிக்காவின் முதலீட்டு நிறுவனமான பெயின் கேபிடலுக்கு விற்பனை செய்துள்ளார் அதானி.

News image
அதானி கேபிடல் விற்பனை
Updated On :24 ஜூலை 2023, 6:58 am

DIN

மும்பை: அதானி குழுமத்தின் கீழ் இயங்கும் நிதிச் சேவை வணிக நிறுவனத்தை அமெரிக்காவின் முதலீட்டு நிறுவனமான பெயின் கேபிடலுக்கு விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் இந்திய தொழிலதிபர் அதானி கையெழுத்திட்டுள்ளார்.

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, நிதிச் சேவை வணிகத்தில் நுழைந்த அதானி குழுமம், அதிலிருந்து வெளியேறும் முகமாக, இந்த விற்பனையை செய்திருக்கிறது.

அதானி ஃபின்சேர்வ் நிறுவனமானது, அதனுடன் நெருங்கிய நிறுவனங்களாக அதானி கேபிடல் மற்றும் அதானி ஹௌசிங் நிறுவனங்களின் 90 சதவிகித பங்குகளை அமெரிக்காவின் பெயின் கேபிடல் நிறுவனத்துக்கு வெளிப்படுத்தப்படாத தொகைக்கு விற்பனை செய்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மீதம் 10 சதவிகித பங்குகளை முதலீட்டு வங்கியாளரும், அதானி கேபிடல் தலைமை நிர்வாக அதிகாரியுமான கௌரவ் குப்தா வைத்திருக்கிறார். 

இந்த நிறுவனத்தை வாங்குவதற்கான போட்டி கடுமையாக இருந்த நிலையில், இதில் பெயின் கேபிடல் வெற்றி பெற்றுள்ளது.

அதானி கேபிடல் நிறுவனம், 2024ஆம் ஆண்டு தனது பங்குகளை ஐபிஓ செய்ய திட்டமிட்டிருந்தது. இரண்டு சதவிகிதப் நிறுவனப் பங்குகளை, பங்குச் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வந்து, அதன் மூலம் ரூ.1,500 கோடி அளவுக்கு திரட்ட திட்டமிட்டிருந்தது. ஆனால், அதற்குள் ஹிண்டன்பர்க் ஆய்வு அமைப்பு, அதானி நிறுவனம் தொடர்பான பல உண்மைகளைத் தொகுத்து அறிக்கையை வெளியிட்டதால், அதானி நிறுவனம் பங்குச் சந்தையில் பெரும் எதிர்விளைவை எதிர்கொண்டு நிறுவனத்தையே விற்கும் நிலைக்குத்தள்ளப்பட்டுள்ளது.

அதானி கேபிடல் நிறுவனமானது, சிறு, குறு மற்றும் விவசாய தொழில்களுக்கான இயந்திரங்கள், கருவிகள் வாங்குவதற்கான கடனையும், அதானி ஹௌசிங், ஊரகப் பகுதிகளில் மலிவு விலையில் வீடுகள் கட்டுவதற்கான கடனையும் வழங்கி வந்தது.

அதானி கேபிடலை வாங்கும் பெயின் நிறுவனம், நிறுவன வளர்ச்சிக்காக ரூ.1,394 கோடிய ஒதுக்கியிருப்பதாகக் கூறப்படுகிறது. காகிதங்களில், விற்பனையாகியிருக்கும் நிறுவனங்களின் மதிப்பு ரூ.2,000 கோடி என்று கூறப்படும் நிலையில், இந்த நிறுவனங்களின் பெயர்கள், நடைமுறை மாற்றங்கள் முடிவடையும் வரை இன்னும் கொஞ்சம் காலத்துக்கு இந்த பெயரிலேயே இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.