45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

அஜீத் பவார் முதல்வராக முடியாது: தேவேந்திர ஃபட்னவீஸ்

அஜீத் பவார் முதல்வராக முடியாது என்றும் அதுபற்றி அவருக்கு நன்றாக தெரியும் என்றும் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியிருக்கிறார்.

News image
Updated On :25 ஜூலை 2023, 6:45 am

DIN


மும்பை: மகாராஷ்டிர முதல்வராக அஜீத் பவார் நியமிக்கப்படவிருப்பதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஒருவர் கூறியிருந்த நிலையில், அவர் முதல்வராக முடியாது என்றும் அதுபற்றி அவருக்கு நன்றாக தெரியும் என்றும் தேவேந்திர ஃபட்னவீஸ் கூறியிருக்கிறார்.

காங்கிரஸ் தலைவர் பிரித்விராஜ் சவான் கூறுகையில், வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி மகாராஷ்டிர முதல்வராக அஜீத் பவார் பொறுப்பேற்கவிருப்பதாகக் கூறியிருந்தார். ஆனால், அதனை துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மறுத்துள்ளார்.

அஜீத் பவார், முதல்வராக முடியாது. அது மட்டுமல்லாமல் அது பற்றி அவருக்கு நன்றாகவே தெரியும். ஜூலை 2ஆம் தேதி நடந்த கூட்டத்தின்போது இது தொடர்பாக அவரிடம் தெளிவாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகே அவர் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார் என்றும் ஃபட்னவீஸ் விளக்கம் அளித்துள்ளார்.

வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும். இதைத் தவிர வேறு ஒன்றும் நடக்காது என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்தக் கூட்டணிக் கட்சிகளின் தலைவராக, நான் இங்கு உங்களுக்கு ஒரு விஷயத்தைச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். அஜீத் பவார் ஒருபோதும் மகாராஷ்டிர முதல்வராக மாட்டார் என்று தெளிவுபடுத்தியிருக்கிறார்.

மகாராஷ்டிரத்தில் முதல்வா் ஏக்நாத் ஷிண்டே, பாஜக கூட்டணி ஆட்சியில் உள்ளது. எதிா்க்கட்சித் தலைவராக இருந்த அஜீத் பவாா் தலைமையில் தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 35 போ் ஆளும் கூட்டணியில் இணைந்தனா். இதில் அஜீத் பவாருக்கு துணை முதல்வா் பதவி அளிக்கப்பட்டது. அவருடன் வந்த எம்எல்ஏக்களில் 8 போ் அமைச்சராகப் பதவியேற்றனா்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பெயா், சின்னம், தலைமைக்கு அங்கீகாரம் கோரி அஜீத் பவாா் தரப்பும், தங்களைக் கேட்காமல் எந்த முடிவும் எடுக்கக் கூடாது என சரத் பவாா் தரப்பும் தோ்தல் ஆணையத்தில் முறையிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.