இனிமேல் மறைமுகமாக மட்டுமின்றி நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
கார்கில் போர் வெற்றி நாளையொட்டி லடாக்கின் திராஸ் பகுதியிலுள்ள ராணுவ வீரர்கள் நினைவிடத்தில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசத்துக்கு தேவைப்படும்போதெல்லாம் ராணுவத்துக்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
இனிமேல் மறைமுகமாக மட்டுமின்றி நேரடியாகவும் போரில் பங்கேற்க மக்கள் தயாராக இருக்க வேண்டும்.
அண்மை காலமாக போர்கள் நீடித்துவருகின்றன. இதனால், ராணுவத்துக்கு உதவ மக்கள் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.