கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எனது அரசு 90 சதவிகித தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளது: அசோக் கெலாட்

எனது தலைமையிலான அரசு 90 சதவிகித தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

News image

கோப்புப்படம்

Updated On :2 ஜூன் 2023, 2:47 pm

DIN

எனது தலைமையிலான அரசு 90 சதவிகித தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

தனது தலைமையிலான மாநில அரசு சாதாரண மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதை நோக்கமாக கொண்டுள்ளதாகவும், கடைசி 5 ஆண்டுகளில் மாநிலத்தில் எந்த ஒரு புதிய வரியும் விதிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். ராஜஸ்தானின் பார்மரில் வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

அப்போது அவர் பேசியதாவது: காங்கிரஸ் அளித்த தேர்தல் வாக்குறுதியில் 90 சதவிகிதத்தை எனது அரசு நிறைவேற்றி விட்டது. மாநிலத்தின் நிதியமைச்சராக 5 பட்ஜெட்டுகளை நான் பேரவையில் சமர்ப்பித்தேன். அந்த 5 பட்ஜெட்டுகளிலும் எந்த ஒரு புதிய வரியும் விதிக்கப்படவில்லை. அதன் காரணத்தினால் பொதுமக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. சமூக பாதுகாப்பு தொடர்பாக பிரதமர் புதிய சட்டத்தினை கொண்டு வர வேண்டும். வறட்சி மாநிலமான ராஜஸ்தானுக்கு மத்திய அரசு கூடுதல் நிதியினை வழங்க வேண்டும். புவியியல் காரணிகள் காரணமாக மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மக்களின் அத்தியாவசிய தேவைகளைப் பூர்த்தி செய்ய ராஜஸ்தானுக்கு அதிக அளவிலான நிதி தேவைப்படுகிறது. இதை மனதில் வைத்து மத்திய அரசு ராஜஸ்தானுக்கு கூடுதல் நிதியினை வழங்க வேண்டும். ராஜஸ்தான் கிழக்கில் உள்ள 13 மாவட்டங்களுக்கு ஆதாரமாக விளங்கும் கிழக்கு ராஜஸ்தான் கால்வாய் திட்டத்தை தேசிய திட்டமாக அறிவிக்க வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.