இந்தியா
ஜம்மு-காஷ்மீரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினரும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரும் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்புப்படையினரும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரும் நடத்திய துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா்.
ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் எல்லைப் பகுதிக்கு அருகே பாதுகாப்புப்படையினரும் ஜம்மு-காஷ்மீர் காவல்துறையினரும் பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொல்லப்பட்டனா். மேலும் அவர்களிடம் இருந்து துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.