இது தொடர்பாக பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது: அரிசியின் விலை தொடர்பாக மத்திய அமைப்புகளிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. அரிசி வழங்குவதற்காக அவர்கள் கோரும் விலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தேசிய நுகர்வோர் கூட்டமைப்பு, கேந்திரிய பந்தர் மற்றும் தேசிய வேளாண் கூட்டுறவு அமைப்பு ஆகிய மூன்று அமைப்புகளிடமிருந்தும் அரிசி வழங்குவதற்கு கோரப்படும் தொகை குறித்து கேட்கப்பட்டுள்ளது. அவர்கள் விலை தொடர்பான விவரங்களை தெரிவித்துள்ளனர். அவர்களிடம் நாங்கள் விலை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்த பேச்சுவார்த்தையின் முடிவுக்குப் பிறகு எவ்வளவு அரிசி வாங்கப்படவுள்ளது, அரிசியின் தரம் மற்றும் அதற்கான விலை குறித்தும் தெரிய வரும்.