பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

அசாம் வெள்ளம்: 5 லட்சம் பேர் பாதிப்பு; காய்கறிகள் விலை கடும் உயர்வு!

அசாமில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

News image
Updated On :2 பிப்ரவரி 2024, 12:42 am IST

அசாமில் பெய்துவரும் தொடர் கனமழை காரணமாக ஏராளமான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

10 ஆயிரம் ஹெக்டருக்கும் அதிகமான வயல்கள் நீரில் மூழ்கியுள்ளது. போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பஜாலி, நல்பாரி, பர்பீட்டா, தம்லூர், பக்சா, கோஹல்பாரா ஆகிய மாவட்டங்களில் சுமார் 4.89 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

16 மாவட்டங்களில் 54 பஞ்சாயத்துகளுக்குட்பட்ட 1, 538 கிராமங்களிலுள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பிரம்மபுத்திரா நதியில் அபாயகட்டத்திற்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து வருவதால், பல இடங்களில் சாலைகள் அடித்துச்செல்லப்பட்டுள்ளன. போக்குவரத்து முற்றிலுமாக முடகியுள்ளன. இதனால், காய்கறி போன்ற அத்தியாவசிய பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

தாழ்வான இடங்களிலுள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. இதுவரை 140 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. நிவாரண பொருள்களை விநியோகம் செய்ய 75 மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வெள்ளத்தில் சிக்கி இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை, காவல் துறையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.